காதல்
கண்கள் தீண்டும்
கனங்களில்
மனங்களில் பூக்கும்
மத்தாப்பூ!
இதயங்கள் உரசும்
தருணத்தில்
நரம்புகள் வாசிக்கும்
புல்லாங்குழல்!
மவுனங்கள் பேசும்
வாசத்தில்
வார்த்தைகள் யாசிக்கும்
வரம்!
காதல் இது வாழ்வில்
வந்து மோதாமல் போனால்
வாலிபம் கூட
வயதானதுதான்...
Comments
Post a Comment